மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்ட அரசாணை பொதுமக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது.
அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்களின் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் முறையான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவான திட்டம் 01.05.2025 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.இத்திட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கிமீ ஆகும். அதில் குறைந்தபட்சம் சேவை செய்யப்படாத பாதையின் நீளம் மொத்த வழித்தட நீளத்தில் 65 விழுக்காட்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும். வழித்தடத்தின் தொடக்க புள்ளி மற்றும் முனையப்புள்ளி சேவை செய்யப்படாத வழித்தடத்தில் உள்ள எதேனும் ஒரு குடியிருப்பாகவோ கிராமமாகவோ இருக்க வேண்டும். அதில் ஒன்று பேருந்து நிறுத்தமாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ இருக்கலாம்.
புதிய மினி பேருந்து திட்டத்தின் படி புதிய அனுமதிச் சீட்டு வழங்கும் தூரத்தை இறுதி செய்யும் அதிகாரம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. மினி பெருந்து வழித்தடத்தை மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்படும்.
முனையப் புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை. மேல்நிலைப் பள்ளி, இரயில் நிலையம், உழவர் சந்தை வேளாண் ஒழுங்குமுறை சந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலூக்கா அலுவலகம் மதம் சார்ந்த வழிப்பாட்டுத் தளங்கள் உள்ள இடம் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இடம் இவற்றுள் ஏதேனும் ஒன்று அமைந்திருப்பின் மொத்த அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளத்தை விட கூடுதலாக ஒரு கிலோ மீட்டருக்குள் அமைந்திருந்தால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்கள், அரசு போக்குவரத்து கழகங்கள். உள்ளாட்சி அமைப்புகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் பிற அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து மேற்கூறிய இடங்களுக்கு பயணிகள் சென்றடைய உதவிடும் வகையில் சேவை பகுதியில் கூடுதலாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.
ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு நான்கு நடைகளுக்கு குறைவாக பேருந்து அல்லது மினி பேருந்து இயக்கப்படும் வழித்தடங்கள் அனுமதிக்கப்படாத வழித்தடங்களாக கருதப்படும்.
ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திற்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளின் எண்ணிக்கையை வட்டாரப் போக்குவரத்து அதிகாரியான மாவட்ட ஆட்சியரால் உறுதி செய்து அறிவிக்கை வெளியிடப்படும். ஒரு வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்ட அனுமதிச் சீட்டுகளின் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் அறிவிப்பு செய்யப்பட்ட வழித்தடத்தில் கூடுதலான பயணிகள் அல்லது அதிக மக்கள் தொகை இருக்கும் நேர்வில் நடப்பில் உள்ள வாகன உரிமையாளர்கள் வாகனங்களை அங்கு இயக்கவில்லை எனில் கூடுதலான வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அனுமதிப்பார். ஒரே வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது குலுக்கள் முறையில் வாகன உரிமையாளர் தேர்வு செய்யப்படுவார்.
தற்போது நடைமுறையில் உள்ள மினி பேருந்து இயக்குநர்கள் புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால் சில விண்ணப்பிக்கலாம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம்
மினி பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தவிர்த்து அதிகபட்சமாக 25 இருக்கைகள் வரை அனுமதிக்கப்படும். மினி பேருந்துகளில் சக்கரத்தின் அடித்தளம் (Wheel base) 390 செ.மீ க்கு மிகாமல் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்கள்.