![3](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/3-1024x563.jpg)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.. தீயை அணைக்க 3 தீயணைப்பு வானங்கள்உடனடியாக வந்து தண்ணீரை பீச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் அங்கு இதுபோன்ற தீ விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் குப்பை கிடங்கை அங்கிருந்து மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் . ஆனால் குப்பை கிடங்கை அங்கிருந்து மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.