சென்னை, ஏப்ரல் , 2026: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட “துபாய் சம்மர் கார்னிவல் சென்னை 2026” (Dubai Summer Carnival Chennai 2026),...
சென்னை செய்திகள்
சென்னை, 27 மார்ச் 2026: ஐஐடி மெட்ராஸ் (இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னை), அதன் முன்னாள் மாணவரான திரு. அரவிந்த் ரகுநாதன் ‘கோட்பாட்டு...
சர்வதேச மகளிர் தினம், 8 மார்ச் 2026 அன்று திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில்அமைந்துள்ள சேவாலயாவின் மையத்தில் கொண்டாடப்பட்டது. எ ஃபியூச்சர் ஃபார்எவ்ரி சைல்டு (AFEC) தொண்டு நிறுவன இணை நிறுவனர்மற்றும் தலைவர் கீதா கோபால் மற்றும் நிர்வாக இயக்குனர்அனுசூயா ராவ் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக்கலந்து கொண்டனர். விழாவில் தன்னார்வலர்களாகபணிபுரிந்து வரும் வழக்கறிஞர் சரஸ்வதி அவர்களும்இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளைசேர்ந்த ஈவ், மார்த்தா மற்றும் அர்ச்சனா ஆகியோரும்பங்கேற்றனர். எ ஃபியூச்சர் ஃபார் எவ்ரி சைல்டு என்பது குழந்தைகள்பராமரிப்பு இல்லங்களிலிருந்து வெளியேறும்இளைஞர்களுக்கு உயர் கல்வி அளித்து வேலைவாய்ப்புக்களைஉருவாக்கும் நோக்கத்தில் செயல்படும் நிறுவனம் ஆகும். AFEC சேவாலயாவுடன் இணைந்து இத்திட்டத்தைதமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது. விழாவில் பேசுகையில் அனுசூயா ராவ் அவர்கள், “பெண்கள்பல காலமாக பல்வேறு தடைகள் மற்றும் பின்னடைவுகளைசந்தித்துள்ளனர். அநீதிகளுக்கு எதிராக பெண்கள் பலஇடங்களில் போராடினர். பெண்களின் உரிமைகளை காக்கவேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையைபின்பற்ற வேண்டும்” என்று கூறினார். கீதா கோபால் அவர்கள் தனது உரையில், “என் அப்பாவுக்குஇரண்டு பெண் குழந்தைகள்தான். ஆண் குழந்தை இல்லை. ஒருநாளும் நாங்கள் யாரையும் விட குறைவானவர்கள் என்றுஉணர வைக்கவில்லை. பதினேழு வயதிலேயே என்னைவெளியூரில் படிக்க அனுப்பினார். பலர் அவரிடம் கேள்விகேட்டார்கள். ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார். சில நேரங்களில் ஒரே ஒரு மனிதரின் நம்பிக்கை போதும். ஒருவரை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல. இன்றுநாங்கள் உங்களுக்காக அந்த ஒரே மனிதராக இருக்கவிரும்புகிறோம். உங்களுள் பலர் மற்றவர்களை விட மிகவும்சீக்கிரமே பெரிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறீர்கள். சிலருக்குஇழப்புகளும் வந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம்தாண்டி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். இது மிகப்பெரிய வலிமை. நாளையஉலகம் உங்களைப் போன்ற பெண்களால் தான் உருவாகப்போகிறது” என்று கூறினார். வழக்கறிஞர் சரஸ்வதி அவர்கள் பேசுகையில், “சந்தோஷம்நமக்குள்ளேயே இருக்கிறது. யாரையும் முழுமையாகநம்புவதற்கு முன் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்”, என்று கூறினார். தன்னார்வலர் அர்ச்சனா பேசுகையில்“எங்கள் நாட்டிலும் பெண்கள் பல தடைகளை கடந்து பலசாதனைகளைப் படைத்து வருகின்றனர். நானும் அவர்களைபோல் பல சாதனைகளைப் படைப்பேன்” என்று கூறினார். தன்னார்வலர்கள் ஈவ் மற்றும் மார்த்தா பேசுகையில்“ஆண்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் பெண்களால்செய்ய முடியும். பல துறைகளில் பெண்கள் முன்னேற்றம்அடைந்து வருகின்றனர்” என்று கூறினார். ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் சேவாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்து வெளியிடும்மாதாந்திர கையெழுத்து இதழான ‘விடியல்’ வெளியிடப்பட்டது. முன்னதாகமாணவர்களுக்கு ஊக்க மனநிலை பற்றிய ஒரு காணொளிஒளிபரப்பப்பட்டது. முன்னதாக, சேவாலயாவின் ஈ ஆர் பி துறைத் தலைவர் சுஜாதாபெ அவர்கள் வரவேற்புரை வழங்கி பேசினார். “மாதர் தம்மைஇழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்றபாரதியாரின் கவிதையை முன் மொழிந்து, சிறப்பு விருந்தினர்அவர்கள் நமது சேவாலயா நிறுவனத்தின் மூலம் பல பெண்குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றனர்” என்று கூறி, சேவாலயாவின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மாணவ மாணவியர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளைவழங்கினர். சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை இல்லங்கள்மற்றும் பண்புக்கல்வி துறைத் தலைவர் காஞ்சனா ச அவர்கள்வழங்கினார். நிறைவாக சேவாலயாவின் கல்வித் துறைத்தலைவர் விஜயா ஆர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சர்வதேச பெண்கள் தினம், சேவாலயாவின் அம்பத்தூர், உத்திரமேரூர், தர்மபுரி, ஜமீன் எண்டத்தூர் மற்றும் தஞ்சாவூர்மையங்களிலும் கொண்டாடப்பட்டது....
8 பகுதி செயலாளர்களில் 5 பேர் முன்னாள் MLA-க்கு சீட் வழங்க கூடாது என போர் கொடி பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக...
இந்த நிகழ்ச்சியில் புதிதாக மேற்கண்ட கூட்டமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 142 பொறுப்பாளர்களை கௌரவிக்கும் விழா , புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா மற்றும் ரியல்...
சென்னை, பிப். : ஆழ்வார்பேட்டையில் உள்ள C.P. ஆர்ட் சென்டரில் “பாரம்பரியம்” கைநெசவு & கைவினைப் பொருட்கள் கண்காட்சி சிறப்பாக தொடங்கியுள்ளது. பிப்ரவரி...
சென்னை, பிப்ரவரி சுமங்கலா ஸ்டீலின் “உங்கள் குழந்தையும் இன்ஜினியர் ஆகலாம்” திட்டம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறி வருகிறது. அதன் மூன்றாவது...
காட்டாங்குளத்தூர், 10 பிப்ரவரி 2025: எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), உலக சமூக சேவை மையம் (WCSC) உடன் இணைந்து, இந்திய...
உருது மக்கள் கட்சியின் சார்பில், இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் மீதும் அதன் அடிப்படைக் கொள்கைகளான நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் அனைத்துகுடிமக்களுக்கும் – குறிப்பாக சிறுபான்மையினருக்கும் – உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றின் மீதும் நாங்கள்உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். கல்வி மேம்பாடு, சமூக நலன் மற்றும் சமயங்களிடையேஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், அரசின்கருணைக்குரிய பரிசீலனைக்காக பின்வரும் பரிந்துரைகளைமரியாதையுடன் சமர்ப்பிக்கிறோம்: 1. **உருது/அரபு ஆசிரியர்கள் நியமனம்** பள்ளிகள் மற்றும் மதரஸாக்களில் தகுதிவாய்ந்த உருது/அரபுஆசிரியர்களை நியமிக்கவும், இளைஞர்களின் மொழி மற்றும்சமயக் கல்வியை வலுப்படுத்த பள்ளிகளில் உருதை விருப்பப்பாடமாக அறிமுகப்படுத்தவும். 2. **பொருளாதார மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு** உருது பேசும் சமூகங்களுக்கு பாரம்பரிய தொழில்கள் மற்றும்நவீன துறைகளில் திறன் பயிற்சி அளிக்கவும், கடன் மற்றும்கடன் வசதிகளை எளிதாக்கவும். 3. **நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் வக்ஃப்சொத்துகளின் பயன்பாடு** அரசு வேலைகளில் சிறுபான்மையினருக்கு நியாயமானபிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும், வக்ஃப் சொத்துகளைகல்வி, வீட்டுவசதி மற்றும் சமூக நலனுக்காக திறம்படபயன்படுத்தவும். 4. **உருது பேசும் பகுதிகளுக்கான இலக்கு மேம்பாடு** ...
சென்னை, பிப்ரவரி 2026 இந்தியாவின் சமூக மற்றும் சட்ட அமைப்புகளுக்குள் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளும், சிறார்களும்எதிர்கொள்ளும் கசப்பான உண்மைகளையும், எதார்த்த நிலைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் புதிய...
