
சுய உதவிக் குழு தினத்தையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருது மற்றும் வங்கி கடன் இணைப்பு களை வழங்கி சிறப்புரை யாற்றினார்.அதன் நேரலை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள அனிதா அரங்கில் ஒளிப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், 596 பயனாளிகளுக்கு ரூ.46.11 கோடி மதிப்பிலான கடனுதவி களை வழங்கி விழா பேருரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கு.சின்ன ப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் சுரேஷ், அருள் மரிய கஸ்பர் ராஜா, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதன்மையர் மருத்துவர் முத்துகிருஷ்ணன், நகர் மன்றத் தலைவர் சாந்தி, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்ரமணி யன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டாட்சியர் முத்துலட்சுமி, கிராம ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.