கட்டாங்குளத்தூர், ஜனவரி 2026:
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) இன்
தொழில் மேம்பாட்டு மையம், வோல்வோ குழுமத்துடன் புரிந்துணர்வு
ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டு, கட்டாங்குளத்தூர் வளாகத்தில் மெய்நிகர்
வாகன தொழில்நுட்பங்கள் (Virtual Vehicle Technologies) குறித்து சிறப்புத் திறன்
மையம் நிறுவ உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், வோல்வோ குழுமம் இந்தியாவின் மூத்த
அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திரு. ஜி. வி. ராவ்,
இயக்குநர் – CSR, வோல்வோ குழுமம் இந்தியா; டாக்டர் ரஞ்சித், தலைமை –
திறமை ஆட்சேர்ப்பு, இந்தியா; திரு. பிரபு கிருஷ்ணன், துணை மேலாளர் –
திறமை ஆட்சேர்ப்பு (University Relations); மற்றும் திருமதி. பத்மாவதி கலிதாசன்,
துணை மேலாளர் – திறமை ஆட்சேர்ப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தொழில் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்
டாக்டர் ந. வெங்கட சாஸ்திரி, "இந்த கூட்டாண்மை கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான செயல்பாடுகளின் விளைவாக
உருவானது," என குறிப்பிட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திற்கு
முன்பே, பேராசிரியர் பயிற்சி திட்டங்கள், மாணவர் திறன் மேம்பாட்டு
முயற்சிகள் மற்றும் உலகளாவிய அனுபவ நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.இந்த கூட்டாண்மையின் முக்கிய நோக்கம், கல்வி நிறுவனங்களுக்கும்
தொழில்துறைக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்துவதாகும்.
வேகமாக வளர்ந்து வரும் வாகன மற்றும் மொபிலிட்டி துறையில்
முக்கியமான மெய்நிகர் வாகன தொழில்நுட்பங்களில், மாணவர்களுக்கு
நடைமுறை அனுபவம் வழங்கப்படும்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு. ஜி. வி. ராவ் கூறியதாவது: “வோல்வோ
குழுமத்தில், திறன் மேம்பாடு எங்களின் CSR செயல்பாடுகளின் முக்கிய
தூணாக உள்ளது. கல்வி கற்றல் மற்றும் தொழில்துறை எதிர்பார்ப்புகளுக்கு
இடையே ஒரு இடைவெளி இருப்பதை நாங்கள் உணர்கிறோம். குறிப்பாக
புதிய வாகன தொழில்நுட்பங்களில் இது தெளிவாக உள்ளது. இந்த சிறப்புத்
திறன் மையத்தின் மூலம், வகுப்பறை அறிவை நடைமுறை, தொழில்துறை
சார்ந்த அனுபவமாக மாற்றுவதே எங்களின் நோக்கம். இதன் மூலம்
மாணவர்கள் தொழில்துறைக்கு முழுமையாக தயாராக முடியும்.”
மேலும் அவர் கூறியதாவது: “இந்த மையம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக
மாணவர்களுக்கு மட்டுமல்ல. அருகிலுள்ள பிற கல்வி நிறுவன
மாணவர்களும் இதன் பயனை பெற வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.
முதல் ஆண்டில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களை பயிற்சி அளிக்க
திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் 2,000 மாணவர்களுக்கு மேல்
விரிவுபடுத்துவதே இலக்கு.”
வோல்வோ குழுமம் இந்தியாவின் திறமை ஆட்சேர்ப்பு தலைவர் டாக்டர்
ரஞ்சித், இந்த முயற்சியின் நடைமுறை சார்ந்த தன்மையை விளக்கினார்.
“இந்த சிறப்புத் திறன் மையம், CSR அடிப்படையில் தொடங்கப்படும் ஒரு
முக்கிய முயற்சி. மெய்நிகர் வாகன தொழில்நுட்பம் இன்று வாகனத்
துறையின் முக்கிய பங்களிப்பாக கருதப்படுகிறது. மாணவர்களுக்கு,
தொழில்துறை பாடத்திட்டத்துடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் பயிற்சி
திட்டம் வழங்கப்படும். இதில் வோல்வோ குழும நிபுணர்கள், கல்வியாளர்கள்
மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பங்களிப்பார்கள்.”மேலும் அவர் கூறியதாவது: “இந்த பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்கள்,
தொழில்துறை பயன்படுத்தும் மென்பொருள் கருவிகள், நேரடி தொழில்துறை
திட்டங்கள் மற்றும் பயிற்சி (internship) வாய்ப்புகளைப் பெறுவார்கள். இதன்
மூலம், பட்டம் பெறும் நேரத்திலேயே அவர்கள் உண்மையான தொழில்துறை
தேவைகளுக்கு தயாராக இருப்பார்கள்.”
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சார்பில், பதிவாளர் டாக்டர் எஸ்.
பொன்னுசாமி மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் டீன் டாக்டர்
லீனஸ் ஜீசு மார்ட்டின் எம். ஆகியோர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
செயல்திறன் மிக்கதாக தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்தனர்.
இந்த சிறப்புத் திறன் மையம், உலகளாவிய வாகன மற்றும் மொபிலிட்டி
துறைக்கு தயாரான எதிர்கால பொறியாளர்களை உருவாக்கும்
எஸ்.ஆர்.எம்.–வோல்வோ குழுமத்தின் கூட்டு நோக்கத்தை இது
வெளிப்படுத்துகிறது.Picture Caption:
1. மெய்நிகர் வாகன தொழில்நுட்பங்களில் சிறப்பு மையம் (Centre of Excellence) அமைப்பதை குறிக்கும் வகையில், வோல்வோ குழுமம் இந்தியா நிறுவனத்தின் CSR இயக்குநர் திரு. ஜி. வி. ராவ் மற்றும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) பதிவாளரான டாக்டர் எஸ். பொன்னுசாமி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டனர்.
2. எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) பதிவாளர் டாக்டர் எஸ். பொன்னுசாமி அவர்கள் நிகழ்வில் உரையாற்றி, எஸ்.ஆர்.எம். – வோல்வோ இணைப்பின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி, தொழில்துறை அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை விளக்கினார்.
