
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு சுமார் 100 க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் மழைக்காலம் நெருங்குவதனால் ஏரி, குளங்களை தூர்வாரி சீர் செய்து தருமாறும் மேலும் ஏரி, குளங்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வடிகால் அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். பல்வேறு கிராமப்பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை சரி செய்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. வட்டாரம் வாரியாக உலர்களம் அமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்க வேண்டும். ஜமின் எண்டத்தூரில் அமைத்து தர வேண்டும் என்றும், பேருந்து வசதி ஏற்படுத்தித்தருமாறும், வேளாண் விதைகள் போதிய அளவில் இருப்பில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்றும், காட்டுபன்றி கட்டுபடுத்த வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில். மாவட்ட வருவாய் அலுவலர் .சுபாநந்தினி. கூடுதல் ஆட்சியர்
அனாமிகா ரமேஷ்,சார் ஆட்சியர் நாராயண சர்மா மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் ஹமீது, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வின்.
இணை இயக்குநர் (வேளாண்மை) பிரேம் சாந்தி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கத்திலுள்ள பசுக்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் மின்சாரம் தாக்கி பலியானதை மாட்டின் உரிமையாளருக்கு, கன்றுடன் கூடிய கறவை மாட்டினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினர்.