
அரியலூரில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு
,மாவட்ட திமுக செயலாளாளரும் , போக்குவரத்து துறை அமைச்சரு மான சா சி சிவசங்கர் வழிகாட்டு தலின்படி அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர் முன்னேற்ற சங்க அரியலூர் கிளை நிர்வாகிகள் சார்பில் ,கல்லங்குறிச்சி சாலை யிலுள்ள பணிமனை முன்பு, தொ.மு.ச கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரியலூர் கிளை செயலாளர் பிவி அன்பழகன் தலைமை வகித்து, தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்கள் தொமுச நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.முன்னதாக இராஜாஜி நகரிலுள்ள சாந்தம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்கள் 30க்கும் மேற்பட்டோ ருக்கு, தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக அரியலூர் கிளை தொமுச சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியினை அரியலூர் நகர திமுக செயலாளர் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச தலைவர் எம். கனகராஜ், பொருளாளர் எம். பழனிச்சாமி,துணைத் தலைவர்
எம் சிவக்குமார், துணைச் செயலாளர் எம்.சுவாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன்,ரமேஷ்குமார் , தன்ராஜ், ஆசைத்தம்பி, வில்வேந்திரன், நடராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்