சென்னை, செப். 18-
ஆண்களுக்கான புரோஸ்டேட் புற்றுநோய், சென்னையில்வேகமாக அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறதுஎன்றும், இது குறித்து ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சைஅளித்தால் அதை எளிமையாக குணப்படுத்த முடியும் என்றும்ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி(AINU) மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து, ஒருமாத விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த இருப்பதாகவும்கூறியுள்ளது.
இதில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் குடும்பபின்னணி மற்றும் மரபியல் தொடர்புடைய நோய் பாதிப்புஉடையவர்கள், ஆரம்ப கால புற்றுநோய் பரிசோதனைசெய்வதன் மூலம் இந்த நோய் கண்டறியப்பட்டால் ” சைலன்ட்கில்லர்” என்று அழைக்கப்படும் இந்த நோய்க்கு தகுந்தசிகிச்சை பெற்று எளிதில் குணமடையலாம்.
இந்தியாவில் ஆண்களிடம் காணப்படும் முதல் 5 புற்றுநோய்களில் புரோஸ்டேட் புற்றுநோய் தற்போது ஒன்றாகும். இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் இந்த நோய் பாதிப்புஎன்பது தற்போது சென்னையிலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பிட்ட சில வயதினரிடையே ஆண்டுதோறும் 5.6% பேருக்குஇந்த பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் 65 முதல் 74 வயதுடைய ஆண்கள் அதிக ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர், வயது சார்ந்த நிகழ்வு விகிதங்களைப் பொறுத்தவரை 1 லட்சம்பேருக்கு 59.9 முதல் 75.8 வரையிலும், 75 வயது மற்றும் அதற்குமேற்பட்ட ஆண்களில் 1 லட்சம் பேரில் 161.6 ஆகவும் உள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும்போதுஅதற்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று AINUமருத்துவமனையின் நிர்வாக இயக்குனர், தலைமை ஆலோசகர்சிறுநீரக மருத்துவர், ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்மற்றும் சிறுநீரக-புற்றுநோய் நிபுணர், டாக்டர் அருண் குமார்பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்கூறுகையில், ஒரு எளிய PSA இரத்த பரிசோதனை மற்றும்மருத்துவ பரிசோதனை என்பது ஒருவரின் வாழ்க்கையின்போக்கையே மாற்றும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், ஆரம்பகால பரிசோதனைகள் குணப்படுத்துவதற்கான சிறந்தவாய்ப்புகளை தருகின்றன என்பதை ஆண்கள் அறிந்து கொள்ளவிரும்புகிறோம். மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைந்து, ரோபோடிக் அறுவை சிகிச்சை இப்போது ஒப்பிடமுடியாததுல்லியத்தை தருவதோடு நோயாளி விரைவில் குணமடைந்துவீடு திரும்பலாம். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில்அதிநவீன தொழில்நுட்பங்கள் தற்போது வந்துள்ளன. எனவேஇது குறித்து எந்த பயமும் தேவையில்லை. நோயை ஆரம்பநிலையில் கண்டறியும்போது அதற்கு சிறப்பான சிகிச்சைஅளிக்க முடியும் என்று தெரிவித்தார்.
இது குறித்து AINU மருத்துவமனை நிர்வாக இயக்குனர், மூத்தசிறுநீரக மருத்துவர் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைநிபுணர் டாக்டர் டி. வெங்கட் சுப்பிரமணியம் கூறுகையில்,இந்தியாவில் பலர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைசெய்து கொள்வதை அசிங்கமாகவும் அதை செய்வதற்குதயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பல நோய்கள் குறித்து ஆரம்ப நிலையில் கண்டறியப்படாமல் அது முற்றிய நிலையில் அதை குணப்படுத்த முடியாமல் போகிறது. நாங்கள் தற்போது சொல்லவந்த செய்தி என்பது, ‘நீங்கள் எதற்காகவும் காத்திருக்க வேண்டாம் – பரிசோதனை விரைவானது, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அது உங்கள் உயிரை காக்கும்’ என்பதுதான் என்று தெரிவித்தார்
புரோஸ்டேட் ஆரோக்கியம் இப்போது ஏன் முக்கியமானது?
• வெளியே தெரியாத அச்சுறுத்தல்: புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் அமைதியாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும், முற்றிய நிலையிலேயே இது குறித்து தெரிய வரும்.
• குடும்ப பின்னணி மற்றும் மரபியல்: பரம்பரை அடிப்படையில் இந்த பாதிப்பு உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் முன்கூட்டியே பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம்.
• வாழ்க்கை முறை அபாயங்கள்: உட்கார்ந்த நிலையிலான வேலை, உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் மோசமான உணவு பழக்க வழக்கம் ஆகியவை ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றன, அதே நேரத்தில் சீரான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அதை குறைக்கும் சிறந்த வழிமுறைகள் ஆகும்.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் கல்வி அமர்வுகள், இலவச பரிசோதனை முகாம்கள் மற்றும் ஆண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் சரியான ஆலோசனை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
