
oppo_32
கமுதி அருகே உள்ள பேரையூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் மற்றும் முளைப்பாறி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூர் முக்குலத்தோர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் மற்றும் முளைப்பாரி விழா நடந்தது. ஏப்ரல் 1ந் தேதி முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்குகாப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் விரதமிருந்து அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை செய்துவந்தனர். 8ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 10030 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபட்டனர். 9ந் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கரும்பாலை தொட்டில் பால்குடம், அங்கபிரதட்சணம், அக்னிசட்டி ஊர்வலமாக எடுத்து வந்து முத்துமாரியம்மனுக்கு செலுத்தினார்கள். இரவு 7 மணிக்கு அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை முளைப்பாரி நடைபெற்றது. 10ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது பின்னர் முளைப்பாரி திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டன.முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்களை கோவில் பூசாரி ஆகியோர் செய்தனர்